டாஸ்மாக்கடை அருகே திடீர் தீ விபத்து


டாஸ்மாக்கடை அருகே திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 19 April 2021 7:19 PM GMT (Updated: 19 April 2021 7:19 PM GMT)

டாஸ்மாக்கடை அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நொய்யல்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே ஈரோடு செல்லும் சாலையில் ஒரு காட்டுப் பகுதியில் அரசு டாஸ்மாக்கடை அருகே ஏராளமான செடி, கொடிகள், புல் வகைகள், மரங்கள் என முளைத்து காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் செடி, கொடிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் திடீரென தீ பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story