முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 19 April 2021 7:24 PM GMT (Updated: 19 April 2021 7:26 PM GMT)

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தோகைமலை,

கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கி இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று காலை தோகைமலை போலீஸ் நிலையம் அருகே சுகாதாரத்துறையினர் மமற்றும் போலீசார் நின்று கொண்டு முககவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் நோய் தொற்றின் தாக்கம் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் மீண்டும் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story