ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு


ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 19 April 2021 8:44 PM GMT (Updated: 19 April 2021 8:44 PM GMT)

போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அதிகாரி லோகநாதன் தலைமையில் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.
மேலும் ஆப்பக்கூடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே தண்ணீரை அப்புறப்படுத்தி கொசு பரவாமல் இருப்பதற்காக ப்ளீச்சிங் பவுடர் போட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story