திருச்சியில் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்


திருச்சியில் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்
x
தினத்தந்தி 19 April 2021 9:00 PM GMT (Updated: 19 April 2021 9:00 PM GMT)

திருச்சியில் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடப்படுகிறது.

திருச்சி
 மகாவீர் ஜெயந்தி நாளான 25-ந் தேதி மற்றும் மே தினமான வருகிற 1-ந் தேதி அன்று அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டிருக்கும். மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் எப்.எல்.-2 முதல் எப்.எல்-2(எப்.எல்-6 தவிர) வரையிலான ஓட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணும் தினமான மே 2-ந் தேதி அன்று மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என ஏற்கனவே அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story