விலையில்லா செல்போன்கள் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் புகார் மனு
விலையில்லா செல்போன்கள் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் புகார் மனு.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நேற்று 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் அரசின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா செல்போன்களை வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், தொடர்ந்து மூன்றுமுறை விண்ணப்பித்தும் தகுதியானவர்களுக்கு விலையில்லா செல்போன்கள் வரவில்லை எனக்கூறி மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவிடம் புகார் மனு அளித்து விட்டு சென்றனர்.
Related Tags :
Next Story