விஷம் குடித்து விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை


விஷம் குடித்து விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 20 April 2021 5:13 PM GMT (Updated: 20 April 2021 5:13 PM GMT)

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி : 

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி அருகில் உள்ள கோவில்புரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 67). விவசாயி. 

இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து கடந்த 18-ந்தேதி பெருமாள் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

 இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல் போடி டி.வி.கே.கே நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (44). கொத்தனார். 

இவர் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

நேற்று முன்தினம் காலையில் வீட்டின் முன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

  உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் உயிரிழந்தார். 

இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story