ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பழைய சோதனை சாவடி பகுதியை சேர்ந்தவர் தவமணி மகன் மகாதேவன் (வயது 21). இவர் ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித்துறையில் தற்காலிக என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அறையின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். அந்த சமயம் பார்த்து மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே புகுந்து மகாதேவனின் மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது திருட்டு நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மகாதேவன் இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.