மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 20 April 2021 7:04 PM GMT (Updated: 20 April 2021 7:04 PM GMT)

மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 68 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 12 ஆயிரத்து 4 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது 544 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.
இதேபோல் அரிமளம் ஒன்றியம் ராயவரம் கிராமத்தை சேர்ந்த 34 வயது ஆண், கீழாநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்த 60 வயது பெண் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில் அரிமளம் ஒன்றியம் கரியாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 பேருக்கும், ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 பேருக்கும் உள்பட மொத்தம் 40 பேருக்கு தடுப்பூசி நேற்று போடப்பட்டது. அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 பேருக்கும், கடியாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 48 பேருக்கும் நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story