மணல் கடத்தியவர் கைது


மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 20 April 2021 8:18 PM GMT (Updated: 20 April 2021 8:18 PM GMT)

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை
குளித்தலை தாலுகா குமாரமங்கலம் பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் அழகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் குமாரமங்கலம் திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது ஆற்றில் இருந்து மணலை திருடி அதை சாக்குப்பையில் கட்டி 2 பேர் மொபட்டில் கடத்தி சென்று கொண்டிருந்தனர். கிராம நிர்வாக அலுவலரை பார்த்ததும் மொபட் மற்றும் மணல் மூட்டைகளை அங்கேயே போட்டு விட்டு அதில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் மொபட் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த அழகர், அதனை குளித்தலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் மற்றும் அஜித்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மோனிசை தேடி வருகின்றனர்.


Next Story