சிறுவன்- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து


சிறுவன்- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து
x
தினத்தந்தி 21 April 2021 5:29 PM GMT (Updated: 21 April 2021 5:29 PM GMT)

சிறுவன்- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துகுள்ளானது.

தோகைமலை
தோகைமலை அருகே உள்ள இனுங்கூர் காவிரி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். பூண்டு வியாபாரி. இவரது மனைவி ராதா. இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று பேரூர் உடையாப்பட்டிக்கு காரில் வியாபாரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். காரை சுப்பிரமணியன் ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும், அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மரிய ஆரோக்கியமேரி மகன் ரூபார்ட் (17) மீதும் கார் மோதியது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 34), வடிவேல் (49), முத்துசாமி (51), ஜார்ஜ் (32) ஆகிய 4 ேபரும் சேர்ந்து சுப்பிரமணியனை தாக்கினர். 
இந்த சம்பவம் குறித்து 2 தரப்பினரும் தனித்தனியாக தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ராதா கொடுத்த புகாரின்பேரில் செல்வம், வடிவேல், முத்துசாமி, ஜார்ஜ் ஆகிய 4 பேர் மீதும், மரிய ஆரோக்கியமேரி கொடுத்த புகாரின் பேரில் பூண்டு வியாபாரி சுப்பிரமணியன் மீதும் தோகைமலை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story