ஆயுதப்படை போலீஸ்காரர் பலி


ஆயுதப்படை போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 22 April 2021 7:05 PM GMT (Updated: 22 April 2021 7:05 PM GMT)

வாகனம் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்

மதுரை
மதுரை கூடல்நகரை அடுத்த தினமணி நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 36). இவர் மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது தல்லாகுளம் கோகலே ரோடு பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ்குமார் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரமேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story