சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை


சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 23 April 2021 10:22 PM GMT (Updated: 23 April 2021 10:22 PM GMT)

சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

சேலம்:
சேலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் மாநகரில் அஸ்தம்பட்டி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அழகாபுரம், கிச்சிப்பாளையம், 4 ரோடு என பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மழைநீர் தேங்கி நின்றது
இந்த மழை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இந்த திடீர் மழையினால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் மழைநீர் சாக்கடை கால்வாய் நீருடன் கலந்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story