லாரி டிரைவரிடம் பணம் பறித்த திருநங்கைகள்


லாரி டிரைவரிடம் பணம் பறித்த திருநங்கைகள்
x
தினத்தந்தி 25 April 2021 8:23 PM GMT (Updated: 25 April 2021 8:23 PM GMT)

லாரி டிரைவரிடம் பணம் பறித்த திருநங்கைகள்

மதுரை
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 47). லாரி டிரைவரான இவர், மதுரைக்கு பொருட்களை ஏற்றி வந்தார். பின்னர் அவர் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள், இரும்பு கம்பியால் அவரை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.5.350-ஐ பறித்து விட்டு சென்றனர். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story