கரூர் மாவட்டத்தில் புதிதாக 114 பேருக்கு கொரோனா


கரூர் மாவட்டத்தில் புதிதாக 114 பேருக்கு கொரோனா
x

கரூர் மாவட்டத்தில் புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் நேற்று 153 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் 774 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

Next Story