வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்கு தொடங்க வேண்டும்


வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்கு தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 26 April 2021 8:35 PM GMT (Updated: 26 April 2021 8:35 PM GMT)

வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்கு தொடங்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு உறுப்பினர் முருகேசன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் வாக்கு எண்ணிக்கையை காலை 7 மணிக்கு தொடங்கி தாமதமில்லாமல் நடைபெவதை உறுதிசெய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வாக்குஎண்ணிக்கையை நிறுத்தாமல் விரைவில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


Next Story