65 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்


65 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 27 April 2021 3:54 PM GMT (Updated: 27 April 2021 3:54 PM GMT)

கோத்தகிரி தனியார் பள்ளியில் 65 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளது. அதை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

கோத்தகிரி

கோத்தகிரி தனியார் பள்ளியில் 65 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளது. அதை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

கொரோனா சிகிச்சை மையம் 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக சிகிச்சை மையங்களை தயார் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

அதன்படி தற்காலிக சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் உள்ள ஒரு பள்ளியில் முதற்கட்டமாக 65 படுக்கை வசதி கொண்ட மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முடிந்தன.

அதிகாரிகள் ஆய்வு 

அந்த கொரோனா மையத்தை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெற அனைத்து வசதிகளுடன் சிகிச்சை பெற இந்த மையம் தயார் நிலையில் உள்ளது.


Next Story