விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை


விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2021 7:11 PM GMT (Updated: 27 April 2021 7:11 PM GMT)

விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

பொன்னமராவதி, ஏப்.28-
திருநெல்வேலி பிள்ளையார் தெருவைச்சேர்ந்தவர் ரமேஷ் என்ற சிவசுப்பிரமணியன் (வயது 40). இவருக்கும் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமேட்டைச்சேர்ந்த செவிலியர் மங்களம் (36) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர் மனைவி மங்களத்துடன் வேகுப்பட்டி ஏனமேடு கிராமத்திலேயே வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரமேஷ் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரமேஷ் விஷம் குடித்தார். வலையபட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபால், சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story