வாகனம் மோதி கொத்தனார் பலி


வாகனம் மோதி கொத்தனார் பலி
x
தினத்தந்தி 28 April 2021 6:54 PM GMT (Updated: 28 April 2021 6:54 PM GMT)

வாகனம் மோதி கொத்தனார் பலியானார்.

திருப்புவனம், 
திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது50). கொத்தனாரான இவர் மோட்டார் சைக்கிளில் வன்னிக்கோட்டை விலக்கு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அமரர் ஊர்தி மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Next Story