தோட்டங்களில் காட்டு யானை அட்டகாசம்


தோட்டங்களில் காட்டு யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 28 April 2021 7:53 PM GMT (Updated: 28 April 2021 7:53 PM GMT)

பணகுடி அருகே தோட்டங்களில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது.

பணகுடி, ஏப்:
பணகுடி ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாய தோட்டங்கள் அதிகம் உள்ளன. இந்த தோட்டங்களில் தென்னை, வாழை போன்றவைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். 
நேற்று முன்தினம் இரவு ரோஸ்மியாபுரம் விவசாயிகள் பாபு, லட்சுமணன், லிங்கம், பால்துரை ஆகியோரின் தோட்டங்களில் புகுந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை, வாழை பயிர்கள் மற்றும் பனைமரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தது. தோட்டத்திற்கு வந்த விவசாயிகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விவசாய நிலங்களுக்குள் வரும் யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story