போராட்டத்தை துண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மீது வழக்கு


போராட்டத்தை துண்டும் வகையில்  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 April 2021 12:36 PM GMT (Updated: 29 April 2021 12:36 PM GMT)

போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் அக்ரிபரமசிவம். இவர் நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் அக்ரிபரமசிவம் மீது, தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story