பெண் தீக்குளிப்பு


பெண் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 29 April 2021 8:22 PM GMT (Updated: 29 April 2021 8:22 PM GMT)

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்தார்.

வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டையை அடுத்துள்ள மரவனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி விஜயலட்சுமி(வயது 25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விஜயலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story