ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 April 2021 7:54 PM GMT (Updated: 30 April 2021 7:54 PM GMT)

செட்டியார்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தளவாய்புரம், 
தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொறுப்பாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதனை தினமும் 100 நபர்களுக்கு தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ராமர், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story