கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது


கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது
x
தினத்தந்தி 30 April 2021 7:58 PM GMT (Updated: 30 April 2021 7:58 PM GMT)

கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை

பேரையூர்
எழுமலை பகுதியை சேர்ந்த 82 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றனர். கும்பமேளா முடிந்த பின்னர் 70 பக்தர்கள் தங்கள் ஊருக்கு திரும்பினர். அவர்களை பேரையூர் தாசில்தார் சாந்தி தலைமையிலான வருவாய் துறையினர் பேரையூர் சின்னக்கட்டளையில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைத்தனர்.அங்கு அவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. கொரானா பரிசோதனை முடிவில் தொற்று இருந்தால் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள். தொற்று இல்லாதவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வருவாய்த்துறையினர் கூறினர்.

Next Story