பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 April 2021 10:35 PM GMT (Updated: 30 April 2021 10:35 PM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்காக கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை மொத்தம் 5 சுற்றுகளாக 12 டி.எம்.சி தண்ணீர் திறக்க முடிவெடுக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நேற்றுடன் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் காலம் முடிவடைந்ததால் நேற்று காலை 6 மணி முதல் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
தண்ணீர் திறப்பு காலங்களில் மழை பெய்ததால் 2-ம் போகத்துக்கு மொத்தம் 10.43 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது. நேற்று காலை 6 மணி அளவில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 88.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 219 கனஅடி தண்ணீர் மட்டும் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story