வேலூர் மாவட்டத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 May 2021 12:04 PM GMT (Updated: 1 May 2021 12:04 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். 

மாவட்டம் முழுவதும் 26 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story