கொரோனா தடை உத்தரவை மீறி இறைச்சி கடைகள் திறப்பு


கொரோனா தடை உத்தரவை மீறி இறைச்சி கடைகள் திறப்பு
x

காரைக்குடி, சிங்கம்புணரி பகுதியில் கொரோனா தடை உத்தரவை மீறி இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன.

காரைக்குடி,

கொரோனா பரவலை தடுக்க தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமையை இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதை தொடர்ந்து சனிக்கிழமை அன்று மீன், இறைச்சி கடைகள் செயல்பட அரசு தடை விதித்தது.  சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில், கல்லல், திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் இறைச்சிகடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் காரைக்குடி, சிங்கம்புணரி, இளையான்குடி ஆகிய பகுதியில் நேற்று அதிகாலை மீன்கடைகள், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான மக்கள் காலையிலேயே இறைச்சிகடைகளில் கூட்டமாக நின்று இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். அரசு விதித்த விதிமுறை மக்கள் நலனுக்கு என்பதை வியாபாரிகளும், பொதுமக்களும் உணர வேண்டும்.

Next Story