மண் அள்ளிய 2 பேர் கைது


மண் அள்ளிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2021 11:02 PM GMT (Updated: 2 May 2021 11:02 PM GMT)

சிவகிரி அருகே மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகிரி, மே:
சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து செந்தட்டியாபுரம் புதூர் கிராமத்திற்கு கிழக்கே உள்ள இடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருப்பதாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சேகனா தலைமையில் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பொக்ைலன் எந்திர டிரைவர் கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த கலியன் மகன் ராமராஜ் வயது (30), டிப்பர் லாரி டிரைவர் கரிவலம்வந்தநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சார்ந்த சாமி மகன் தங்கராஜ் (30) என்பதும், சட்ட விரோதமாக மண் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மண் அள்ளுவதற்கு பயண்படுத்திய பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story