செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 1,582 பேர் பாதிப்பு 16 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 1,582 பேர் பாதிப்பு 16 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 May 2021 12:04 AM GMT (Updated: 3 May 2021 12:04 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,582 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,582 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 970 ஆக உயர்ந்தது. இதில் 8 ஆயிரத்து 866 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 35 ஆயிரத்து 543 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 554 உயர்ந்துள்ளது. 2,725 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story