கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி ஒரே நாளில் 127 பேருக்கு தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி ஒரே நாளில் 127 பேருக்கு தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 112 பேர் பலியான நிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று 478 பேரின் உமிழ் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,771-ல் இருந்து 12,898-ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story