மேலும் 223 பேருக்கு கொரோனா


மேலும் 223 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 May 2021 5:10 PM GMT (Updated: 3 May 2021 5:10 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மேலும் 223 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மேலும் 223 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதில் 58 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

அதேநேரம் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த 57 வயது ஆண் கொரோனாவுக்கு பலியானார். 

194 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 

இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 16 ஆயிரத்து 504 ஆக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி 1,603 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

Next Story