காட்டு யானைகள் அட்டகாசம்


காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 3 May 2021 6:25 PM GMT (Updated: 3 May 2021 6:27 PM GMT)

காட்டு யானைகள் அட்டகாசம்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே புஞ்சைக்கொல்லி பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவில் 2 காட்டுயானைகள் புகுந்தன. 

தொடர்ந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டன. பின்னர் யோகேஸ்வரன் என்பவரது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சேரம்பாடி வனவர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். 

பின்னர் காட்டுயானைகளை விரட்டியடித்தனர். இதேபோன்று கோட்டப்பாடி, தட்டாம்பாறை ஆகிய பகுதிகளிலும் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. மேலும் அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலையில் உலா வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

Next Story