மாவட்டத்தில் ஒரேநாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் ஒரேநாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 3 May 2021 6:35 PM GMT (Updated: 3 May 2021 6:35 PM GMT)

மாவட்டத்தில் ஒரேநாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
229 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக சென்ற வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன பல்வேறு விழிப்புணர்வுகளை சுகாதாரத்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்பேரில், கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மருத்துவமனையில் சிகிச்சை
இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 118 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்றைய நிலவரப்படி 1,181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story