மதுபாட்டில்கள் விற்றவர் கைது


மதுபாட்டில்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 3 May 2021 7:21 PM GMT (Updated: 3 May 2021 7:21 PM GMT)

மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்

ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பாலமுருகன்(வயது 30). இவர் அனுமதி இல்லாமல் இந்திரா நகர் டாஸ்மாக் கடை அருகில் மதுபாட்டில்கள் விற்று வருவதாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது விற்பனைக்காக 72 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனை கைது செய்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story