வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 3 May 2021 7:21 PM GMT (Updated: 3 May 2021 7:21 PM GMT)

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர

ராமநாதபுரம்
ராமநாதபுரம் வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). ஓய்வுபெற்ற போக்குவரத்துத்துறை ஊழியரான இவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று இருந்தார். ஆஸ்பத்திரியில் மனைவியை அனுமதித்து அங்கு தங்கியிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். மேலும் ஊரில் இருந்து திரும்பி வந்த மாரியப்பன் வீட்டில் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story