தளவாய்புரம் பகுதியில் மழை


தளவாய்புரம் பகுதியில் மழை
x
தினத்தந்தி 3 May 2021 7:26 PM GMT (Updated: 3 May 2021 7:26 PM GMT)

தளவாய்புரம் பகுதியில் நேற்று மழை பெய்தது.

தளவாய்புரம், 
தளவாய்புரம், சேத்தூர் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. இந்தநிலையில் மதியம் 3 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு மேகமூட்டமாக காட்சியளித்தது. இதனையடுத்து மாலை 4.20 மணிக்கு இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அரை மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இவற்றால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த கோடைகால திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story