நெல்லை மாவட்டத்தில் 403 பேருக்கு கொரோனா பாதிப்பு


நெல்லை மாவட்டத்தில்  403 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 7:43 PM GMT (Updated: 3 May 2021 7:43 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் 403 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 403 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா பரவல்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சற்று ஆறுதலாக கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழே வந்தது. அதாவது 403 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 516 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் 713 பேர் குணமடைந்தனர். தற்போது 4 ஆயிரத்து 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 பேர் பலி

மேலும் அரசு ஊழியர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 முதியவர்கள், நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர், தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 80 வயது பெண், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 57 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்

இதுதவிர பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சார்ந்த 52 வயது அரசு ‌ஊழியர் தொற்றால் பாதிக்கப்பட்டு, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுவரை நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.

Next Story