ஆத்தூர் மோட்டார் வாகன அலுவலக அலுவலருக்கு கொரோனா தொற்று


ஆத்தூர் மோட்டார் வாகன அலுவலக அலுவலருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 3 May 2021 11:19 PM GMT (Updated: 3 May 2021 11:19 PM GMT)

அலுவலருக்கு கொரோனா தொற்று

ஆத்தூர்:
ஆத்தூர் ெரயில் நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இதன் அருகிலேயே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணக்கு பிரிவில் பணிபுரியும் ஆத்தூரை சேர்ந்த அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அலுவலகத்திற்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நேற்று ஒருநாள் அலுவலகத்திற்கு விடுமுறை விடப்பட்டது.

Next Story