சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 607 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 607 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 11:19 PM GMT (Updated: 3 May 2021 11:19 PM GMT)

புதிய உச்சமாக 607 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 607 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
607 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 582 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 607 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 325 பேர், ஆத்தூரில் 40 பேர், ஓமலூரில் 36 பேர், சேலம் ஒன்றியத்தில் 24 பேர், நங்கவள்ளியில் 22 பேர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 18 பேர், பனமரத்துப்பட்டியில் 14 பேர், பெத்தநாயக்கன்பாளையம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், தாரமங்கலத்தில் 12 பேர், மேச்சேரியில் 10 பேர், கெங்கவல்லியில் 9 பேர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், மேட்டூரில் 5 பேர், கொங்கணாபுரத்தில் 4 பேர், கொளத்தூர், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
43 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 442 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 ஆயிரத்து 638 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
3 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 65, 66 ஆகிய வயதுடைய முதியவர்களும், 75 வயதுடைய மூதாட்டியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 549 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story