கெங்கவல்லி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை


கெங்கவல்லி அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2021 11:20 PM GMT (Updated: 3 May 2021 11:20 PM GMT)

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த மணிகண்டன் நேற்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கிணற்றில் இருந்து மணிகண்டனின் உடலை உறவினர்கள் மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story