மொபட் மோதி மூதாட்டி பலி


மொபட் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 4 May 2021 4:16 PM GMT (Updated: 4 May 2021 4:16 PM GMT)

மொபட் மோதி மூதாட்டி பலி

மேலூர்,மே.5-
மேலூர் அருகே உள்ள வெள்ளலூரைச் சேர்ந்தவர் காமாட்சி (வயது 70). இவர் வெள்ளலூரில் இருந்து கோட்டநத்தம்பட்டி செல்லும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்து போனார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விபத்துக்கு காரணமான மொபட்டை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த ஹேமலதா (26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story