வேளாண்மை உதவி இயக்குனர் கொரோனாவுக்கு பலி


வேளாண்மை உதவி இயக்குனர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 4 May 2021 4:41 PM GMT (Updated: 4 May 2021 4:41 PM GMT)

விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கொரோனாவுக்கு பலியானார்.

விராலிமலை,மே.5-
விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கொரோனாவுக்கு பலியானார்.
வேளாண்மை உதவி இயக்குனர்
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்  ராமு (வயது 50). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது.
இந்தநிலையில் அவர் சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் 3 நாட்கள் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டார். ஆனால் அவரது உடல் நிலை சீராகவில்லை.
கொரோனாவுக்கு பலி
இதனையடுத்து அவர் கடந்த 28-ந் தேதி கொரோனா சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ராமு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இந்த சம்பவம் விராலிமலை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story