பழனியில் பூத்த பிரம்ம கமலம் பூ


பழனியில் பூத்த பிரம்ம கமலம் பூ
x
தினத்தந்தி 4 May 2021 5:17 PM GMT (Updated: 4 May 2021 5:17 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில் பிரம்ம கமல செடியில் பூ பூத்தது.

பழனி: 

 பழனி அடிவார பகுதியை சேர்ந்தவர் ராஜா என்பவர் வீட்டில் பிரம்ம கமல செடியை வளர்த்து வருகிறார். 

இதில், நேற்று முன்தினம் இரவு ஒரு பிரம்ம கமலம் பூ பூத்தது. 

இது பிரம்மனுக்கு பூஜை செய்ய உகந்த பூ ஆகும். 

இந்த பூ நள்ளிரவில் மலர்ந்து, அதிகாலையில் உதிர்ந்து போகும். 

மேலும் இந்த பூ அதிக மணம் கொண்டது. 


தகவலறிந்த அப்பகுதி மக்கள், நேரில் சென்று பிரம்ம கமலம் பூவை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். 


Next Story