பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2021 6:44 PM GMT (Updated: 4 May 2021 6:44 PM GMT)

காரைக்குடியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்குடி,

காரைக்குடி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.இவரது மகன் முனீஸ்வரன் (வயது 16).இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முனீஸ்வரன் கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story