தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு


தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு
x
தினத்தந்தி 4 May 2021 6:58 PM GMT (Updated: 4 May 2021 6:58 PM GMT)

தனியார் நிறுவன ஊழியர் மர்மமாக இறந்தார்.

நெல்லை:

கேரளாவை சேர்ந்தவர் வினோத் ராஜன் (வயது 39). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நெல்லை ஸ்ரீ்புரத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் விடுதி அறையின் கழிவறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வினோத் ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வினோத் ராஜன் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story