நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 86 பேர் கைது
இலங்கை கடற்படையால் ராமேசுவரத்தை சேர்ந்த 86 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். கொரோனா காரணத்தால் பின்னர் அவர்களை விடுவித்தனர்.
ராமேசுவரம்,
இலங்கை கடற்படையால் ராமேசுவரத்தை சேர்ந்த 86 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். கொரோனா காரணத்தால் பின்னர் அவர்களை விடுவித்தனர்.
மீன்பிடி தடைக்காலம்
இந்த நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் நாட்டு படகுகள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று வருகின்றன.
86 மீனவர்கள் கைது
இவ்வாறு நாட்டுப் படகுகளில மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் நேற்று காலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடித்ததாக கூறி 11 நாட்டுப்படகையும் சிறைபிடித்ததுடன் படகில் இருந்த 86 மீனவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
கொரோனா பரவலால் விடுவிப்பு
இதுகுறித்து மீனவர்கள் கூறியபோது, “இந்திய கடல் பகுதியில்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கூறுவது தவறானது. இலங்கை கடற்படையினர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தங்களை கைது செய்தனர். கொரோனா காரணமாக விடுவித்தனர்” என்றனர்.
Related Tags :
Next Story