விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி


விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி
x
தினத்தந்தி 4 May 2021 7:29 PM GMT (Updated: 4 May 2021 7:29 PM GMT)

விபத்தில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்

தாயில்பட்டி
வெம்பக்கோட்டை அருகே உள்ள புலிப்பாறைபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார்(வயது 48). இவர் சாத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிந்து சொந்த கிராமமான புலிபாறைபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மண்குண்டாம்பட்டி அருகே நாய் குறுக்கே வந்ததில் தடுமாறி ரோட்டில் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பழனிக்குமார் இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story