பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு


பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு
x
தினத்தந்தி 4 May 2021 7:29 PM GMT (Updated: 4 May 2021 7:29 PM GMT)

பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு

விருதுநகர்
விருதுநகர் அருகே சதானந்தபுரத்தில் கடந்த மாதம் 15-ந் தேதி தேசிங்கு ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஏற்கனவே ஆதிலட்சுமி மற்றும் சுந்தரபாண்டியன் ஆகிய இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் விபத்தில் படுகாயமடைந்து விருதுநகர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆனையூரை சேர்ந்த செந்தி வயது 35 என்ற பெண் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இவரது உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இத்துடன் இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Next Story