வீடுகளில் திருட முயன்ற 2 பேர் கைது
வீடுகளில் திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
மும்பையைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருக்கு சொந்தமான வீடு நெல்லை முன்னீர் பள்ளத்தை அடுத்த வாஞ்சி நாதன் நகரில் உள்ளது. அந்த வீட்டை பொன்னாக்குடி பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 59) என்பவர் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மர்ம நபர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பொன்னாக்குடியை சேர்ந்த முருகன் (42) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (44). இவர் பொன்னாக்குடி வாஞ்சிநாதன் நகர் பகுதியில் சொந்த வீடு கட்டி உள்ளார். அவ்வப்போது அங்கு சென்று வருவார். சம்பவத்தன்று மர்ம நபர் அவரது வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணி (32) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story