கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி


கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி
x
தினத்தந்தி 4 May 2021 8:19 PM GMT (Updated: 4 May 2021 8:19 PM GMT)

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்:

பலி எண்ணிக்கை உயர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 517 பேருக்கு ெகாரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,491 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த 75 வயதான மூதாட்டி இறந்ததாக, சுகாதாரத்துறையினர் நேற்று அறிவித்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
31 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் 62 பேருக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 672 பேருக்கும் என மொத்தம் 734 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர் ஒன்றியத்தில் 1,168 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 518 பேரும், வேப்பூர் ஒன்றியத்தில் 602 பேரும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 488 பேரும் என மொத்தம் 2,776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் தற்போது 256 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மதனகோபாலபுரம், மேட்டுத்தெரு, டால்பின் நகர், துறைமங்கலம், தீயணைப்பு வளாகப்பகுதி, எளம்பலூர், சிறுவாச்சூர், களரம்பட்டி, கொளப்பாடி, இரூர் ஊராட்சிகள், லெப்பைக்குடிகாடு, குரும்பலூர் பேரூராட்சி பகுதிகள் கொரோனா தொற்று பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 34 ஆயிரத்து 930 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story