தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோபியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 8 பவுன் நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தூர்
கோபியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 8 பவுன் நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விற்பனை மேலாளர்
கோபி நாகமலை குடியிருப்பு விரிவாக்க வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருடைய மனைவி கவுசல்யா. சரவணன் வேலூரில் உள்ள ஒரு ஆயில் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 20-ந் தேதி கவுசல்யா வீட்டை பூட்டி விட்டு கணவரை சந்திக்க வேலூர் வென்றுவிட்டார். பின்னர் 30-ந் தேதி வீடு திரும்பினார்.
8 பவுன் நகை
அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், லேப்டாப், மற்றும் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து சரவணன் கோபி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story